காயல்பட்டினத்தில் ஆளுநரை நீக்க கோரி ம.தி.மு.க கையெழுத்து இயக்கம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 July 2023

காயல்பட்டினத்தில் ஆளுநரை நீக்க கோரி ம.தி.மு.க கையெழுத்து இயக்கம்.


திருச்செந்தூர் ஒன்றியம் மற்றும் காயல்பட்டினம் நகர மதிமுக சார்பில் மக்கள் ஆட்சியை மதிக்காத தமிழ‌்நாடு ஆளுநர் ஆர் என் இரவியை நீக்கக் கோரி, காயல்பட்டினம் சீதக்காதி திடல் விலக்கில் 09.07.2023 காலை 10:30 மணிக்கு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது, திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் பி எஸ் முருகன் தலைமை வகித்தார் மாவட்டப் பொருளர், காயல் அமானுல்லா, நகரச் செயலர், பக்ரூதீன், இலக்கிய அணி  எஸ்.ஏ.நைனா, பொதுக்குழு உறுப்பினர்கள் நல்லூர் கருப்பசாமி பாண்டியன் நாராயணன் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் புதுக்கோட்டை ப.செல்வம் தொடங்கி வைத்தார். 


காயல் நகர்மன்ற தலைவர் முத்து முகம்மது முதல் கையெழுத்து இட்டார். இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வே.இரஞ்சன், திருச்செந்தூர் ஒன்றிய மதிமுக பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், ஒன்றியப் பொருளர் வினிஸ்டன் ஆறுமுகநேரி பேரூர் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சுடலை ஆண்டி, நத்தைக்குளம் ஜஸ்டின், அம்மன்புரம் புதுக்குடி முருகன், வில்சன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் நாராயணன், மதிமுக தொழிற் சங்க மாரிமுத்து, அந்தோணி, ஆழ்வை ஒன்றிய மதிமுக செயலர் பொ.ஜெயக்கொடி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறிஞர் அணி அமைப்பாளர் சோழியகுறிச்சி இராமச்சந்திரன், தூத்துக்குடி மேற்கு ஒன்றியச் செயலர் ஆனந்தராஜ்,மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், காங்கிரஸ் அப்துல் காதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பன்னீர் செல்வம், சங்கரேஸ்வரன், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad